198
மறைமலையம் 30
-30 3-5-1905 (பாலகங்காதார திலகரின்) Arctic Home in the Vedas படிக்கத் தொடங்கினேன்.
5.5.1905 நாளை மாலை 5.30 மணிக்கு நடக்கவிருக்கும் 'மரக்கறியுண்போர் சங்க'த்தில் உரையாற்ற இணங்கினேன்.
13-5-1905 ஆரியர், தமிழர் ஆகியோரின் வரலாற்றைப் பற்றிய ஆங்கில நூல் பல படித்தேன். சுவாமி விவேகானந்தரின் ஞானயோகம்' வாங்கி இரண்டு உரை படித்தேன். அவை நுண்ணியனவாகவும் அருமையாகவும் இருந்தன.
14-5-1905 அட்டாவதானம் கலியாணசுந்தர முதலியார் கேட்டுக்கொண்டதற்கிணங்க மெய்கண்டார் வரலாற்றை வெளியிட்டேன். 'பழந்தமிழரும் ஆரியரும்' கட்டுரையைத் தொடர்ந்து எழுதி வருகிறேன்.
25-5-1905 (மதுரைத் தமிழ்ச் சங்க) இரண்டாவது கூட்டம் நடந்தது; கனகசபைப் பிள்ளை தலைமை தாங்கினார். மு. இராகவையங்கார் 'வேளிர்' பற்றிக் கட்டுரை படித்தார். ‘பழந் தமிழரும் ஆரியரும்' பற்றி நான் உரையாற்றினேன்.
28-5-1905 விடியற்காலை தூத்துக்குடி அடைந்தோம். 29-5-1905... சிதம்பரம் பிள்ளையவர்களின் இல்லத்தில் சுவாமி வள்ளிநாயகம் அவர்களுடன் இரவுணவு உண்டோம். 30-5-1905... பகலுணவும் இரவுணவும் வ. உ. சிதம்பரம் பிள்ளையவர்கள் வீட்டில்....
25-6-1905... திரு. இரத்தினசபாபதி, திரு. உருத்திர கோடி, திரு. ஞானரத்தினம் ஆகியோர் வீட்டுக்கு வந்தனர்; கடற்கரை சென்றோம். சென்னையில் தமிழ்ச்சங்கம் தொடங்குவது பற்றிக் கலந்து பேசினோம்.
1-9-1905 இன்று
ன்று நல்ல
நாள்
ஆகையால் 134,
செங்கழுநீர்ப் பிள்ளையார் கோவில் தெரு, மண்ணடி வீட்டுக்குக் குடி பெயர்ந்தோம்...
4-9-1905 திருவருட்பிரகாச சபைக்குச் சென்று தலைமை
யுரை ஆற்றினேன்.
•