210
-30
மறைமலையம் 30
20-7-1913 மயிலாப்பூர் இரானடே அரங்கில் எனது வடநாட்டுப் பயணத்தைப் பற்றிய கூட்டத்துக்கு இராயப் பேட்டை சங்கம் ஏற்பாடு செய்திருந்தது... அன்புள்ளம் கொண்ட இளஞ்சைவர் பண்டித கலியாணசுந்தரம் வீட்டில் இன்றிரவு தங்கினேன்.
25-7-1913 தமிழ் மூலிகைகளுக்கு ஆங்கில-இலத்தீன் பெயர்களை எழுதினேன்.
6-8-1913 நாகை சொ. தண்ட பாணி என்னைக் காண
வந்தார்.
22-9-1913 இராயப்பேட்டை திருவாளர் திரு.வி.கலியாண சுந்தர முதலியார் என்னைக் காண வந்தார்.
17-12-1913 ‘போட் மெயிலி'ல் இன்று மாலை தூத்துக் குடிக்குப் புறப்பட்டேன். திருவாளர் திரு.வி. கலியாணசுந்தர முதலியார் உடன் வருகிறார்.
20-12-1913 தூத்துக்குடி சைவ மாநாடு.
1914
29-3-1914 வடமொழியில் உபநிடதங்களைக் கற்கத் தொடங்கினேன். இசாவசியத்தைத் தமிழில் பெயர்க்கத் தொடங்கினேன்.
30-3-1914 இரவில் திருவாளர் திரு.வி. கலியாண சுந்தர முதலியார் வந்தார்; நெடுநேரம் உரையாடினோம்.
16-4-1914 பவணந்தி முனிவரைப் பற்றிய என் கருத்துரை 'வைசியமித்திர'னில் வெளிவந்தது.
4-5-1914 பொள்ளாச்சியில் தாசில்தார் நெல்லையப்ப பிள்ளை தம் இல்லத்துக்கு அழைத்தார்; இணங்கினேன். இவர்க்குச் சைவ சித்தாந்தம் தெரியும் என்றாலும் பிரும்ம ஞான சபையில் (Theosophical Society) அதிக ஆர்வம் கொண்டு, வீணாக அதனை நம்பி வருகிறார்.
16-5-1914.... 24 ஆண்டுக்கு முன்னர் நான் தொடங்கிய (நாகை) இந்துமதாபிமான சங்கத்தின் ஆண்டுக் கூட்டத்துக்குத் தலைமையேற்க இணங்கினேன்.