மறைமலையடிகளார் நாட்குறிப்புகள்
257
10-3-1944 சுவாமி சிவானந்த சரசுவதி என்னைக் காண
வந்தார்.
21-4-1944 திரு. இராசமாணிக்கம் பிள்ளை தம் நண்பர் ருவருடன் வந்து, தமது ‘பல்லவர் வரலாறு’ நூலை எனக்குக் கொடுத்து விட்டுச் சென்றார்.
30-4-1944 என்
மகள் நீலாவின் கணவர் திரு. வ. திருவரங்கம் 28ஆம் நாளன்று மறைந்தார் என்னும் செய்தி வரப்பெற்றேன்.
12-8-1944 இராவ்சாகிபு கு. கோதண்டபாணி பிள்ளை என்னைக் காண வந்தார். அவர் கேட்டுக் கொண்டபடி, அவர்தம் நெடுநல்வாடை உரையையும், குறட்பாக்களையும் எவ்வெவ் வகையில் செழுமைப்படுத்தலாம் என்று சில கருத்துகளைக் கூறினேன்.
22-8-1944
Liberator இதழின் உதவி ஆசிரியர்
திரு. (கா.) அப்பாத்துரைப் பிள்ளை என்னைக் காண வந்தார்.
1945-46
17-2-1945
தொல்காப்பியப்
பதிப்பாசிரியர்
சி.வை. தாமோதரம் பிள்ளையைப் பற்றிப் பாராட்டுரை எழுதி பல்கலைக் கழகத்தைச் சார்ந்த
அண்ணாமலைப்
திரு. என். சிவபாதசுந்தரனுக்கு அனுப்பி வைத்தேன்.
.
18-3-1945 திரு. பாரதிதாசனின் பிறந்த நாள் விழாக் கொண்டாட்டக் குழுவுக்கு என்னைத் தலைமையேற்குமாறு திரு. கா. அப்பாதுரைப் பிள்ளையும் அவருடன் வந்த அவர்தம் நண்பரும் வேண்டினர். நான் இணங்கவில்லை.
11-4-1945 முல்லைப் பதிப்பகம் திரு. முத்தையா தம் ந ண்பர்களுடன் என்னைக் காண வந்தார். என் நூல்களை வாங்கினார். பாரதிதாசனின் ‘எதிர்பாராத முத்தம்’ நூலைக் கொடுத்து, எனது கருத்தை எழுதி விடுக்குமாறு வலியுறுத்திக் கூறினார்.
13-4-1945 பாரதிதாசனின் நூலைப் பற்றி என் கருத்தை வெளியிட்டுத் திரு. முத்தையாவுக்கு மடல் விடுத்தேன்.