உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 30.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பின்னிணைப்பு

271

5. தொல்காப்பியர், திருவள்ளுவர்

.

தொல்காப்பியர் எல்லாவற்றையும் அறிந்தவர். ஆனால், அவரை அறியாதவர்கள் தமிழ் நாட்டிலே அதிகம். இது தமிழர் களுக்கு ஒரு மானக்கேடு. தம்மிடம் களஞ்சியம் இருக்க, கருவூலம் இருக்கப் பிறரிடம் பிச்சை கேட்கும் இரவலர்களாகத் தமிழர் இருப்பது பெரிதும் வருந்துதற்குரியது.

செந்தமிழ் மொழிக்கொரு நந்தாமணி விளக்காய்த் தோன்றித் தன்கட் சுடர்ந்தொளிரும் அறிவுப் பேரொளியைத் தான் பிறந்த தமிழ் நாட்டவர்க்கு மட்டுமேயன்றி, இந்நிலவுலகின் பிற பகுதிகளிலுள்ள பிறநாட்டு மாந்தர்க்கும் வேற்றுமை யின்றி வீசி, எல்லாரையும் ஒரே முழு முதற் கடவுளாம் ஒப்பற்ற தந்தைக்கு உரிமை மகாராய் வைத்து, அவரறிய வேண்டும் அரும்பொருள் முற்றும் ஒருங்கே அறிவுறுத்துந் தெய்வத் திருக்குறள் என்னும் நூலை அருளிச் செய்த பெரியார்.

மாறுபட்ட அறு சமயத்தோரும் தழுவிக் கொள்ளத் தக்க வகையில் வள்ளுவனார் முப்பாலை மொழிந்திட்டார்.அன்றியும் பலவகைப்பட்ட சாதியாரும், நாட்டினரும், காலத்தினரும், பிறரும் ஏற்றுக் கொள்ளத்தக்க வகையில் அந்நூல் செய்யப் பட்டிருந்தவை யினாலேயே அதனை ‘எப்பாவலரும்’ தழுவிக் கொள்வாராயி னர்.

கிறித்து பிறப்பதற்கு முப்பது ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவர் பிறந்தார். ஆண்டைத் தவிர அவர் பிறந்த நாளும் திங்களும் அதற்குச் சான்றுங் கிடைக்கவில்லை. 1977 ஆண்டுகளுக்கு முன் (இன்றைக்கு 2007) திருவள்ளுவர் பிறந்தார் என்பது மட்டும் உறுதி. (கி.பி. 1976 + 31 = 2007)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_30.pdf/304&oldid=1592670" இலிருந்து மீள்விக்கப்பட்டது