இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
48
- மறைமலையம் – 31
மிகச் சிறு தொகையினராகவே அந்நாளில் இருந்தாராகல் வேண்டும். ஆதலினாற்றான் ஒரு பெருங்கடல் நீரில் ஓடிமறைந்த ஒரு சிற்றருவி நீர் போலவும், பகலவன் ஒளியில் மறைந்த ஒரு சிறு விளக்கொளி போலவும் பெருந்தொகை யினராய் இருந்து நாகரிக ஒளிமிக்கு நன்குயிர் வாழ்ந்த தமிழ்மக்களிடையே, மிடிப்பட்டு ஒளியின்றி வந்து கலந்த ஆரியர், பெரும்பாலும் அவரின் வேறாய்ப் பிரித்துத் தனிப்பட வைத்துக் காண்டற்கு இயலாமலே மறைந்து போயினர்.