76
மறைமலையம் - 34
"இருபதாம் நூற்றண்டின் இணையற்ற புலவரென” இயல் “கா.சு பிள்ளை” உரைக்க,
"எதனையும் துணிவாக உரைப்பவர் துணிப்பவர்” என்று “சந் தோஷம்” உரைக்க,
“பொறுமையாய்ப் பயின்றவர்; நினைவாற்றல் நிறைந்தவர் புலமையும் மிகுதி” என்றே
66
புகழ்மிகும் “உ.வே.சா." மகிழ்ச்சியால் பூரிக்கப் புத்துயிர் அளிக்க வந்தோய்!
அருமையாய் உரைநடை இன்னோசை உடையதாய்
அகலமும் காட்டி நிற்க
அளவிலா நுட்பமும் திட்பமும் நயமுமாய் ஆற்றொழுக் கெழுத்து மிக்க
திருவினார் என “இராக வையங்கார்” புகழ்ந்தவா!
5)
சிறுபறை முழக்கி அருளே!
தென்றலென மன்றமெலாம் நின்றுலவு சைவமுனி சிறுபறை முழக்கி அருளே!
புளியம் பழம்போலப் பற்றில்லா இல்லறமே
போற்றுதற் குரிய தென்றும்
பொன்னான நேரத்தைப் பொழுதாகச் சேமித்துப்
புகழோடு வாழ்க என்றும்
ஒளியின் உருவமென உலகத்தில் உள்ளஇறை உயர்பதங்கள் தொழுக என்றும்
ஒன்றாக நன்றாக இன்றைக்கே செய்கவென உலகத்திற் கெடுத்து ரைத்தும்
கா.சு.பிள்ளை, க.ப.சந்தோஷம் உ.வே.சாமிநாத அய்யர், மு.இராகவ அய்யங்கார் போன்ற பெரும்புலவர்கள் மறைமலை அடி களின் புலமையைப் புகழ்ந்தனர்.