* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன்
உடன்பிறந்தார் தமக்குள்ளே ஒற்றுமையாய் வாழ்ந்திட்டால்
உலகத்தை ஈர்க்க லாகும்.
6
ஒப்பற்ற அன்பாலே உலகத்தார் யாவரையும்
உடன்பிறந்தார் ஆக்க லாகும்.
மடமையினால் சொத்தென்றும் மனையென்றும் மனைவியென்றும்
மக்கட்பே றென்ப தாலும்
மாறான எண்ணத்தால் தீராத பகைகொண்டு
மாற்றார்கள் போல நின்றே
உடன்பிறந்தார் பகைகொள்ளல் உள்ளத்தின் தளர்ச்சியென
உலகத்தார் உணர வேண்டும்.
ஒற்றுமையைப் போலுலகில் உயர்செல்வம் வேறில்லை
உடன்பிறப்பு போல வாழ்வில்
திடமான துணையில்லை என அறிவு தீட்டியவா!
சிறுதேர் உருட்டி அருளே!
தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே!
5) சிறுதேர் உருட்டி அருளே!
மங்கையர்கள் எல்லோரும் அறிவாற்றல் துணிவுகளில் மங்கையர்க்கே அரசி யாகி
மணமிக்க புகழோடு குணமிக்க கற்போடு
மதிபெற்று வாழ வேண்டும்.
செங்கையினில் பொருளேந்தி ஏழைஎளியோர்கட்குச்
சேவையினால் அன்ன மிட்டுச்
சிவனுக்கும் உலகுக்கும் சிறப்பான தொண்டாற்றிச்
செயலூக்கம் காட்ட வேண்டும்.
66
அறிவுரைக்
83
கொத்தில்”அடிகள் “உடன்பிறந்தார்
ஒற்றுமை” எனும் தலைப்பில் மேற்கண்ட கருத்துக்களைக்
கூறியுள்ளார்.