84
மறைமலையம் - 34
மங்காத விருந்தோம்பி அன்பான இன்சொல்லும்
மாறாமல் பொழிவ தோடு
மதியாத குறைநீக்கி, நதியான இறைபாடி மணமான கல்வி கற்று
சிங்கார வாழ்க்கையிலே பேரின்பம் பெறச் சொன்னோய்! சிறுதேர் உருட்டி அருளே!
தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே!
6) சிறுதேர் உருட்டி அருளே!
கூட்டான வாணிகம்போல் நாட்டாரைச் சேர்ப்பிக்கும்
குணமான சக்தி இல்லை
கொள்கையெனக் கொண்டதனால் குவலயத்தில் ஓடோடிக்
கொத்தான பொருள்கள் சேர்த்தே
ஈட்டாத பொருள்இல்லை எனமக்கள் பாராட்ட
ஏழைஎளி யோர்கள் போற்ற
இனியபொருள் குறைந்தவிலை எனுமாறு விற்பதுடன்
ஏராள இலாப மின்றி
நாட்டார்கள் சீராட்ட நயமான சொல்பேசி
நடுவுநிலை தவறி டாமல்
நலமான முகப்பொலிவும் வளமான அகப்பொலிவும் நம்பிக்கை நேச நெஞ்சும்
“அறிவுரைக் கொத்தில்” அடிகள் “பெண்மக்கள் கடமை என்னும் தலைப்புக் கட்டுரையில் மேற்கண்ட கருத்துக்களை எழுதி உள்ளார்.
"அறிவுரைக் கொத்தில்” காத்தில்" அடிகள்
அடிகள் “கூட்டு வாணிகம்”
எனும் தலைப்பில் மேற்கண்ட கருத்துக்களைக் குறிப்பிட் டுள்ளார்.