* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் கூட்டான வாணிகத்தின் கொள்கையெனக் கூறியவா! சிறுதேர் உருட்டி அருளே!
தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே!
7) சிறுதேர் உருட்டி அருளே!
சூல்கொண்ட காலத்தில் கால்கொள்ளும் எண்ணங்கள் சூழுமே கருவி னுக்கும்!
சுவையான எண்ணங்கள் துணிவான வீரங்கள் சூலிலே கருவி லேறும்!
சேல்போலும் கண்ணோடு பால்போலும் தங்கைக்குத் திருமாலாம் கண்ணன் அன்று
தீரத்துக் கதையெல்லாம் வீரத்தால் சொல்லியதைத்
தினவோடு கேட்ட தாலே
வாள்போலும் அபிமன்யு தூள்போலப் பகைநீக்க வளமாகப் பிறந்து நின்றான்.
வற்றாத எண்ணங்கள் முற்றாகக் கருவாகும் வாய்மையைத் தாயர் எண்ணித்
தேள்போலும் மனம்நீக்கிப் பால்மனம் கொளச்சொன்னோய்! சிறுதேர் உருட்டி அருளே!
தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே!
8) சிறுதேர் உருட்டி அருளே!
தங்கை = சுபத்திரை.
66
85
அறிவுரைக் கொத்தில்” அடிகள் ‘பெற்றோள் கடமை’ எனும் தலைப்பில் மேற்கண்ட கருத்துக்களைக் கூறி உள்ளார்.