இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
86
-
- மறைமலையம் -34 *
கல்லாத மூடர்க்குப் பொல்லாத பிறவியது
கடல்அலையாய்ப் பெருகி நிற்கும்
கைசலிக்க வேதாவும் மெய்சமைக்க வையாமல்
கல்வியினைக் கற்க வேண்டும்.
பொல்லாத உலகநூற் கல்வியது வையத்தில்
போற்றுமே உடலை மட்டும்.
புகழ்மிக்க அறிவுநூற் கல்வியினால் நிலையான
போற்றுதல் உயிருக் குண்டு.
வெல்லாத பொருளில்லை; கொள்ளாத புகழில்லை
வெற்றியும் குறைவதில்லை.
விலங்காக இல்லாமல் அறிவுநூல் கற்றோர்கள் விற்பன்னர் ஆகக் கல்வி
செல்லாத பிறவியிலை எனஉண்மை செப்பியவா! சிறுதேர் உருட்டி அருளே!
தில்லைநட ராசனுக்குப் பல்லாவர வாசகனே!
9) சிறுதேர் உருட்டி அருளே!
வேதா = பிரமன்.
“உலகநூற் கல்வி உடம்பை வளர்க்கும். அறிவுநூற் கல்வி உயிரை வளர்க்கும்" என மேற்கண்ட கருத்துக்களை “அறிவுரைக் காத்தில்” அடிகள் “அறிவுநூற் கல்வி” என்னும் கட்டுரையில் வரைந்துள்ளார்.