இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்
திருமகள்
(ஆசிரிய விருத்தம்)
சிந்தை குளிரச் செந்தா மரையில் திகழும் திருமகளைச்
செல்வம் வழங்கிச் சீரினை நல்கத்
திடமாய் வருபவளை
விந்தைபுரியு செங்கண் திருமால் விரும்பும் மணமகளை வெற்றிக் கழல்கள் பற்றித் தொழுதே விழைவாய்த் துதிபுரிவோம்
முந்தை வினையின் முற்படு நோற்பால் முகிழ்த்த தமிழ்மலரை
1
முற்றுந் தமிழில் முழங்கித் தொண்டு முறையாய்ப் புரிமகவை
எந்தை யம்பல வாணர்? தம்புகழ்
இசைக்கும் மறைமலையை
எங்கும் புகழும் மங்காச் சுடரை இனிதாய்ப் புரந்திடவே.
119
6
1. மறைமலையடிகள்
2. அடிகள் பொன்னம்பல வாணரைத் தம் வழிபடு தெய்வமாகக் கொண்டவர்.