இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்
133
பொங்கெழி லொன்றுதி ரண்டதைப் போலப்
பொன்னார் திருமேனி
பூவினில் வாழ்பிர மன்திருக் கையாற் பூட்டிய செம்மேனி
கங்கையைத் தன்சடை கொண்டவன் நெற்றிக்
கண்வரு செவ்வேளா
காவினில் பூத்திடு மென்மலர் நெஞ்சுள்
கண்டத மிழ்த்தேனோ
எங்குளன் மன்மதன் இங்கிவன் தானோ
என்றிப் பார்திகைக்க
ஏற்றமுந் தோற்றமுந் தேற்றமும் பெற்றே
ஏந்திடு புகழுடையன்
அங்கனி யின்சுவை தன்மொழி கொண்டவன்
ஆடுக செங்கீரை
ஆய்ந்துத னித்தமிழ் அன்பொடு தந்தவன்
ஆடுக செங்கீரை.
18
அடிகளின் உருவப் பொலிவு தெய்வ வடிவங்களோடு ஒப்பிட்டுப் பாராட்டப்படுகின்றது.