* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்
151
அணிபுனை தமிழ்ச்சீரை யறிவுடன் நெஞ்சத்தில் அணையேற்றி நாளுமாய்ந்தே
அறிஞர்க ளொப்பியே யகமாரப் போற்றிட
அனைத்தையு முறைப்படுத்தும்
பணியினைப் புரிந்துயர்ப் பரிவோடு நாளிதழ் பயனெண்ணி அச்சிலேற
பசுந்தரை மீதிலே யிளந்தென்றல் சூழஅமர் பான்மையென யின்பமேவ
நுணியசெந் தமிழ்நாகை நீலலோ சனியோடு நுகர்திரா விடமந்திரி
நுவலுசித் தாந்ததீ பிகையென்னுந் தாள்களில் நுணுகியா ராய்ந்ததெல்லாந்
தணிந்தலுங் குறைதலும் தாமின்றித் தந்தவா
சப்பாணி கொட்டியருளே
தனக்குவமை இல்லதோர் தனித்தமிழில் வல்லவா சப்பாணி கொட்டியருளே.
34
நாகப்பட்டினத்திலிருந்து வார இதழாக வெளிவந்த நீலலோசனியிலும், காரைக்காலிலிருந்து வெளிவந்த திராவிட மந்திரியிலும், அடிகளை ஆசிரியராகக் கொண்டு சென்னையி லிருந்து திங்கள் இதழாக வெளிவந்த சித்தாந்த தீபிகையிலும் அடிகள் காய்தல் உவத்தலின்றி கட்டுரைகளும், மறுப்புகளும் எழுதி வந்தார்.