இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்
159
5. முத்தப்பருவம்
(ஆசிரிய விருத்தம்)
முத்துக் குமரன் தனைஈந்து
மும்ம தவேழத் தினையுள்ளி
முழுதும் பேசா நிலையமர்ந்து
முனைப்பா யேற்று சிவனன்பிற்
சித்த செலுத்தி யுருகியுளம்
சிந்தித் தேனே திருக்கூத்துச்
திருவே தேனே திருக்கூத்துச்
சிவவே யென்று தெளிவோடு
பித்தந் தவிர்க்கும் பெருமானை
பெண்ணை இடங்கொள் திருவானை
பெரிதா யருள்செய் வல்லோனை
பிறவா யாக்கைப் பெரியானை'
முத்துத் தமிழாற் பாடியவாய்
முத்தந் தருக முத்தமே
முடியா முதலைப் பாடியவாய்
முத்தந் தருக முத்தமே.
41
1.கருவுற்றுப் பிறவாத இயற்கை வடிவினன் சிவபெருமான்.