இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம் மணக்கும் நறுசந் தனமரமும்
மருவைத் தருமென் மலரினமும்
மலரில் பொலிவும் மதுநிறைவும்
மதியில் திகழு மொளிநிலையும்
சுணக்கங்' கொடுக்கா துடனுடனே
தொடர்ந்து மகிழ்வைத் தருமாப்போல்
துவக்கத் துவக்க இனிதூட்டிச்
சுவைக்கச் சுவைக்க அருளூட்டும்
இணக்கம்' செறிந்த இன்குரலும்
இசையுங் கலந்த தமிழமுதை
இனிதாய்ப் படைக்க ஏழிசையே
எழுந்தே குருவாய் வந்தமகன்
3
சிணக்கங் கொடுக்க மனத்தெண்ணிச்
சிறியேம் சிற்றில் சிதையேலே
செப்பத் தமிழைத் தந்திடுவோய்
சிறியேம் சிற்றில் சிதையேலே.
1. தாமதம்.
2. விருப்பம்.
3. GOTLILD.
197
77