இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
206
மறைமலையம் -34 *
பல்வகை நூல்களிலும் பயின்றதன் சாற்றினைப்
பயன்கொள்ள உலகளித்துப்
படித்தபுல வர்க்கெல்லாம் மதிப்பைநிலை நாட்டியே பயமின்றிப் பணியுமாற்றித்
தொல்புகழ் மேன்மைகொள் சைவசித் தாந்தசபை
தோற்றமுறத் துணைபுரிந்து
துடிக்கவுயிர்க் கொலைசெய்து புசித்திடல் கள்ளுண்ணல் தொலைக்கும்நிலை வலியுறுத்தி
கொல்லுபுன் னிறசமயக் கொள்கைகரு தாமலே
குடும்பமெனப் பிறரையெண்ணிக் கொளும்வாழ்க்கைச் சடங்கெலாந் தமிழிலே நடத்திடற்
குரியனவும் முழக்கமிட்டுச்
செல்வரைப் பாடாது சிவன்புகழ் பாடினோய்
சிறுபறை முழக்கியருளே
சீருற்ற பெருவாழ்வுப் பேருற்ற மறைமலை
சிறுபறை முழக்கியருளே.
85
வாழ்க்கை இறுதிச் சடங்குகள் தமிழில் நடைபெற வேண்டுமென அடிகள் விரும்பினார்.