இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பிள்ளைத்தமிழ் - சி. அன்பானந்தம்
217
அருளுங் கருணை இறைவன் நெஞ்சி
லமைவாய் வந்திடவும்
அறிவும் தெளிவும் வளமும் திடமும் அருளித் தந்திடவும்
மருளும் புரியாக் கொடுமை இருளும் மறைந்தே ஓடிடவும்
மலரும் உள்ளத் துள்ளொளி பரவி மகிழ்வே கூடிடவும்
பொருளும் நலமே புரியும் நினைவும் பொருந்திப் பல்கிடவும்
புகழ்சேர் தமிழிற் குலகோர் வணக்கம்
பொலிவாய் நல்கிடவும்
உருளும் வையப் பெருந்தேர் வாழ்த்த
உருட்டுக சிறுதேரே
உயர்தமிழ் வரையும் மறைமலைப் பூங்கை
உருட்டுக சிறுதேரே.
97