* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்
9
ஆட்சியாளர்
1அடிநாள் தொடங்கிநனி மேம்பட்டு வருபெருமை ஆர்தரு பழங்குடியினில்
ஆட்சிசெய் மாட்சியான் அரியதமிழ் போற்றலான் ஆன்றோர் தமைப்பேணலான்
நெடியபுகழ் கொண்டிலகு பெருவேந்தர் ஆண்டவெம் நீள்தமிழ்க் குடிவாணரை
நிறைவேற்ற உறுதிகள் பலசொல்லி ஆட்சிசெய்
நிலையுற்ற பேறுபெற்றீர்!
அடிமையின் மூழ்கியும் அறியாது 2மாழ்கியும்
3அலமந்த தமிழுலகினை
அறிவொடும் உணர்வூட்டி நெறியுறச் செய்துமற்(று) அயலவர் 4விரகுகொன்றோன் 5குடிமக்கள் அரசினர் கடமைகள் விளக்குநன் குற்றங் கடிந்துரைப்போன்
கூர்த்தமதி யாலரிய சான்றாண்மை யாற்பெரிய 6குருமணியைக் காத்தருள்கவே!
குறிப்புரை :
1.
அடிநாள் தோற்றநாள்.
233
2. மாழ்கியும் - மயங்கியும்.
3.
4.
அலமரல் - ‘அலமரல் தெருமரல் ஆயிரண்டும் சுழற்சி' - (தொல்). விரகு தந்திரம்.
5. குடிமக்கள் - 'குடிமக்கள் கடமை' என்பது அடிகளாரின் கட்டுரைகளில்
ஒன்று.
6. குருமணி - நிறம் பொருந்திய மாணிக்கம் போல்பவன்.