* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்
2. செங்கீரைப் பருவம்
235
11
தனித்தமிழ் அமுதமாய் இனித்திடும் பெற்றியைச் சாற்றியள் ளூறியொழுகத்
தாள்-தூவல் ஏந்தியெமை வாழ்விக்கும் இருகையுந் தலையினில் ஊன்றி நிற்பப்
3பனித்திடும் பெருங்கடல் அணிகின்ற பார்மகள்
4பார்த்திலா மைக்கிரங்கிப்
பாதமொன் 5றிறையூன்றி யொருகாலை நீட்டிநற் பாங்கான தோற்றத்தொடும்
குனித்தபுரு வத்தினன் அம்பலத் தரசுநங் கோனினைக் கண்டுவையங்
கூறுதமிழ் வீறுறும் எனவுவந் தாடல்செய் கூத்தினிய நேர்த்தியதனைத்
6தினிக்கண்ண வர்க்கெலாங் காட்டுபே ரருளாள செங்கீரையாடியருளே!
தென்னா டெழுச்சியுற முன்னோடி யாயவன் செங்கீரையாடியருளே!
குறிப்புரை :
1. அள் வாய் நீர்.
—
2. தூவல் - மையூற்றெழுதுகோல்.
3. பனிப்பு
―
4. பார்த்திலா
குளிர்ச்சி.
-
அடிகளார் இல்லத்தில் துணிச்செருப்பும், வெளியில்
பாதக்குறடும் அணிதலின் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள்.
5. இறை - சிறிது.
6. தினி - மேதினி, தலைக்குறை.