இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
250
மறைமலையம் -34 *
26
(வேறு)
பண்டைப் பாண்டியர் கண்டன கழகம்
பட்டு மறைந்தமையின்
பைந்தமிழ் நாளும் நைந்திழி நிலையைப்
பார்த்துளம் நனிவேர்ப்புக்
கொண்டுயர் கூடலில் பாண்டித் துரைமகன் கூட்டிய ‘கழகத்துக்
குலவிய நலமிகு புலவோர் தாமுங் 2கோமக னும்போற்றப்
3பண்டைத் தமிழர் ஆரியர் இயல்புகள் பாரித் துரைசெய்து
பரவு புரட்சிக் கொடியை யுயர்த்திப்
படையும் நடப்பித்துத்
4தண்டத் தலைமையின் கொண்டனை வாகை தாலோ தாலேலோ!
தண்டமிழ் தழையத் தழையுங் கொண்டல் தாலோ தாலேலோ!
குறிப்புரை :
1. கழகம் கழகம்.
2.
―
மதுரையில் பாண்டித்துரையார் நிறுவிய நான்காந் தமிழ்க்
‘கோமகன்’ - பாண்டித்துரையார்.
3. L1600T 60L. ‘பண்டைக் காலத் தமிழரும் ஆரியரும்' என்னும் நூல் மதுரைத் தமிழ்க் கழகத்தில் அடிகளார் நிகழ்த்திய சொற்பொழிவு. 4. தண்டத்தலைமை படைத்தலைமை.