இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்
37
'தேவர் குறளும் பாவயின் அமுதச் செந்தமிழ் 2மூதாட்டி
தெளிவாய் உணரத் தெரிவித் தருளிய
திருநூல் வரிசைக்கண்
மூவர் தமிழை யடுத்து விளங்கும் முனிமொழி யீதென்று
முன்னோர் காட்டிய வடநூ லன்று
முன்னூற் கடையென்று
3நாவலன் கூறிய உரையை இலக்கண நன்மர புக்கொவ்வா
நலமில் லுரையென முன்னோர் உரைநல நவிலலின் நடுவுநிலைக்
கோவென யாவரும் ஏத்துறு பெரியோய் கொட்டுக சப்பாணி!
கோலத் தமிழால் ஞாலம் மகிழக் கொட்டுக சப்பாணி!
261
குறிப்புரை :
1. தேவர்...
2. மூதாட்டி
3. நாவலன்
―
―
"தேவர் குறளும் திருநான் மறைமுடிபும்” எனும் வெண்பா.
ஔவையார்.
சபாபதி நாவலர்.