இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்
263
39
இளமையிற் கொண்டான் இறப்பக் கைம்பெண்
எனுநிலை தாமெய்தி
எல்லையில் அல்லல் அழுந்துறு மகளிர்
இடர்வாய் மீண்டேறி உளமிசை வாரை மறுமணங் கூடி
ஒழுக்கத் துடன்வாழ
உள்ள மிரங்கித் திருந்துக வென்றே உரைத்தரு ளியதன்றி
இளமை மகளிரை முதியர் மணக்கும் இழிநிலை மாற்றியவர்க் (கு)
ஏற்புறு கைம்பெண் மகளிரை வரைகென இசையுங் கருத்துலகம் கொளநல மிக்க அறிவுரை தந்தோய்
கொட்டுக சப்பாணி!
கோலத் தமிழால் ஞாலம் மகிழக் கொட்டுக சப்பாணி!
குறிப்புரை :
இளம்பருவக் கைம்பெண்கள் மறுமணங்கூட
ஆவன செய்ய வேண்டுமெனவும், முதிய ஆடவர் மணக்க விரும்பின் கைம்பெண்களையே மணக்கத் தூண்ட வேண்டுமெனவும் அடிகளார் தமது சீர்திருத்தக் குறிப்புக்களில் கூறியுள்ளார்.