இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
266
மறைமலையம் -34 *
42
செவ்வையாய்ச் சொற்பொருள் உணர்ந்துநெஞ் சுருகிநற்
செம்பொருளை இனிதுபோற்றிச்
சிறப்புமிகு வழிபாடு செய்துயர மாட்டாது
சிறுமையே யுறுவேமெனத்
'தவ்வளைக் கூச்சலாய்ச் செவியுறப் பெற்றவர்
தமக்கன்றியும் விள்ளுவார்
தமக்குமொரு பொருளுணர்வு தாராத வடமொழித்
தகவில்வழி பாடுசெய்தே
எவ்வளவு பயனுமறி யாததமிழ் மக்கட்(கு)
இனிக்குங் 2கரும்பிருக்க
―
இன்னாத வேம்புநுகர் கின்றமை விளக்கி நன்(கு)
ஏலுமறி வுரைவழங்கி
எவ்வமில் இருந்தமிழில் இறைவனடி போற்றுநின் எழில்வாயின் முத்தமருளே!
ஏற்றமிகு பாவாணர் போற்றிடுந் திருவாள எழில்வாயின் முத்தமருளே!
குறிப்புரை :
1. தவ்வளை
தவளை.
2. கரும்பிருக்க... "கரும்பிருக்க வேம்பு நுகர்வார் போல” என்பது அடிகளார் தமது திருவாசக விரிவுரையில் கூறியுள்ள உவமை.