இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
270
மறைமலையம் -34 *
46
சீர்கொண்ட நந்தமுன் னோர்கண்ட வறிதுயில் சிறப்புணர்ந் துரியமுறையே
செம்மையாய்க் கையாண்டு நன்மைபெற மாட்டாது
சிறுமையுறு தமிழருயர
ஓர்கின்ற நுண்ணுணர்வும் ஒப்பிலாப் பேரறிவும்
உலகநலம் வேட்குநெஞ்சும்
உடையவெம் பெருமநன் காராய்ந்து 'நூல்வகுத்(து) உதவியது மன்றிநின்பால்
நேர்கின்ற அடியவர்க்(கு) ஆங்கவர்கள் மேற்கொள
நெறிப்படு பயிற்சிமுறையும்
நீணிலம் பயன்கொள்ளு மாறவ் வருங்கலை
நிகழ்த்துமுறை யும்விளக்கி
ஏர்கொண்ட தமிழினாற் கட்டளை மொழிதரும் எழில்வாயின் முத்தமருளே!
ஏற்றமிகு பாவாணர் போற்றிடுந் திருவாள எழில்வாயின் முத்தமருளே!
குறிப்புரை :
1. நூல் - 'யோக நித்திரை அல்லது அறிதுயில்'
—
அடிகளாரின் நூல்.