இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
274
மறைமலையம் -34 *
50
'சாந்துணை யும்நனி கற்கவெனுஞ் 2சான்றோன் மெய்ம்மொழி வழிநின்று
சற்றும் பிழையா தினிதொழுகிச்
சாற்றும் ஞாலத் தாய்மொழியாம்
தீந்தமிழ் மொழியும் ஆரியமும்
தேயம் பலவும் நனிபரவித்
திகழும் ஆங்கிலத் தொடுபிறவும்
திறவோர் முயற்சியின் அவைநன்றே
ஏந்திய பற்பல துறைகொண்ட
ஏற்றம் மிக்க நூல்களெலாம் இரவும் பகலும் வேட்கையொடும்
இனிது பயின்று வழிகாட்டும்
ஏந்தல் எந்தாய் செம்பவள
எழில்வாய் முத்தந் தருகவே! எறிதிரை நாகைக் கடல் முத்தே எந்தாய் முத்தந் தருகவே!
குறிப்புரை :
1. சாந்துணை... - 'யாதானும் நாடாமால்' என்னுந் திருக்குறள்.
2. சான்றோன்
திருவள்ளுவர்.