278
மறைமலையம் -34 *
54
கருத்துப் புரட்சியான் உலகந் திருத்துவார்
கருதுவ வெளிப்படுத்தும்
கருவியா வனபேச் செழுத்தொழுக் கம்மெனக் கைக்கொள்ளு 1மூன்றனுள்ளும்
பொருத்தமிகு நடுவதே ஏனைய விரண்டினும் பொருவரும் பயன்நல்கலின்
புகலப் பெரும்பணிக் கச்சகம் தம்முடைப் பொறுப்பினில் இயங்கல்நன்றால்
திருத்தமுறு திருமுருகன் அச்சகம் நிறுவிநற் றீந்தமிழில் ஆங்கிலத்தில்
தெருளார்ந்த நூல்களும் 2மாதிகையும் எழிலார்ந்து திகழுமா றச்சியற்றி
வருத்தந் தொலைந்துயாம் இன்புற வழங்கியருள்
வள்ளலெஞ் செம்மல்வருக! வளருந் தமிழ்ப்பயிர் வாட்டம் தவிர்த்திட வந்தகரு முகில்வருகவே!
குறிப்புரை :
1. மூன்றனுள்ளும்... யாதேனுமொரு கருத்தை வெளிப்படுத்துதற்கு வாயில்களான பேச்சு, எழுத்து, நடப்பு என்னும் மூன்றுமாம். இவற்றுள்
பேச்சும் நடப்பும் காலமும் இடமும் கடந்து பயன்தரமாட்டா. எனவே எழுத்தொன்றே பெரும் பயன் நல்குவதாம்.
2. மாதிகை – மாதந்தொறும் வரும் வெளியீடு (monthly).