286
மறைமலையம் -34 *
62
மண்ணிலடி 1தோயாத வியல்பினை எமையாளும் மன்னவனும் அன்னனேயால்
மாந்தர்கள் 2மதிக்கின்ற பெருமையை ஈங்கிவன் மாட்சிநீ அறியாயலை
கண்ணுதற் செஞ்சடை யவன்கொள விருந்தனை கண்மணியின் நிலையுமதுவே
கனிவோடு நள்ளிரவின் இனிதியங் குவையிவன் கருதுபணி 3செய்யுமக்கால்
எண்ணவரு வரிசையின் உலாவருவை எங்கள்தம் ஏந்தல் உலாக்கண்டுளை
இருந்தவாற் றாலிவன் றனைநிகர்க் கின்றனை இனியவாய் மழலைபேசி
அண்மையில் வருமாறு நண்புற வழைத்தனன்
அம்புலீ யாடவாவே!
அரியகற் றவர்கள்பயில் நாகை கிழானொடும் அம்புலீ யாடவாவே!
குறிப்புரை :
இப்பாடலும் ஒப்பு (சமம்) என்னும் வாயில் முறைபற்றி அம்புலியை அடிகளார்க்கு உவமித்துப் பாடியது.
1. தோயாத... - அடிகளார் பாதங்கள் நிலத்தில் தோய்தலில.
2. மதித்தல்
அம்புலியை அடிப்படையாகக் கொண்டே நாள் எண்ணிக்கையும் திங்கள் வரையறையும் செய்யப் பெறுகின்றன.
3. செய்யுமக்கால்... அடிகளார் நள்ளிரவில் விழித்திருந்து படித்தல் எழுதுதல் முதலியன செய்வார்.