இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
288
மறைமலையம் -34 *
64
தன்பெருக் கங்கொண்ட கல்வியறி வாண்மையால் தகுதிமிகு கலைநலத்தால்
தாளாண்மை யின்வந்த 1பட்டறிவு வன்மையால் தன்னே ரிலாச்செவ்வியன்
துன்புறுத் துங்கொடிய நோய்நொடிகள் யாவையும் தூய்மை மருந்தால்அறி
துயில்படுத் தரியநன் முறைமையால் வேரோடு தொலைத்துநல மாக்குவன்காண்
நின்வருத் தஞ்செயும் பிணிபற்றி வையகம் நிகழ்த்துமுரை கேளாதிலேம்
நிரம்பவும் பேறுடைய நினையழைத் தானீண்டு
2நிமையத்தின் ஓடிவருதி
அன்பருக் கெளியனாய் உதவுவான் இவனொடும் அம்புலீ யாடவாவே!
அரியகற் றவர்கள்பயில் நாகை கிழானொடும் அம்புலீ யாடவாவே!
குறிப்புரை :
இப்பாடலும் உதவி (தானம்) என்னும் வாயின் முறை பற்றியது.
1. பட்டறிவு பட்டறிவு என்பது வடநூலாரால் அநுபவம் எனப்படுவது. 2. நிமையம் – நிமைய மாவது சிறுபொருள் கன்னல்.
―