இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
290
மறைமலையம் -34 *
66
செம்மைசால் நன்மதியன் என்றிவனை வையஞ்
சிறப்பிப்ப தறியாயலை
சீரிலாப் பேதைமையை வெண்மையறி வென்றல்நின் சிறுமையை வெளிப்படுத்தும் இம்மைக்கும் ஏழேழ் பிறப்புக்கும் ஒளிநல்கும்
எந்தை, இராப்பொழுதுநீ
எரிதரும் நிலவினால் பெரிதுபயன் இல்லென எடுத்துரைப் பின்மிகுதியாம்
எம்மையாள் உடையவன் அறிவுக் கடல்தரும் ஏற்றமிக் குடையகுரிசில்
எளியை உவர்க்கடல் தருதலின் வந்தனை இவையெலாம் ஆய்ந்துபாராய்
1அம்மவிவன் நின்னை மதித்தழைத் தான்மகிழ்ந் (து) அம்புலீ யாடவாவே!
அரியகற் றவர்கள்பயில் நாகை கிழானொடும் அம்புலீ யாடவாவே!
குறிப்புரை :
இப்பாடலும் பிரிப்பு (பேதம்) என்னும் வாயின் முறை பற்றியது.
1. அம்மவிவன்... “அம்ம கேட்பிக்கும்” - தொல்.