இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்
73
'பிறவா யாக்கைப் பெரியோன்றன் பேரரு ளானற் பெருவீடு பெறுமுறை பேசுந் திருநெறியின் பெருமைகள் காட்டுந் திருவாள திறவும் பூட்டும் இல்லாவிச்
சிறிதாம் வீட்டைச் சிதைப்பதுதான் சீர்த்திய தோபே ரின்பத்தின்
சிறப்புடையதுவோ வாய்விள்ளாய் நறவுறழ் இனிமையின் முதன்மையதாய் நானில மேத்துஞ் செந்தமிழை நற்றாய் மொழியாய்ப் பெற்றவர் வாழ் நலமிகு நிலமென மேன்மைமிகு
திறவோர் போற்றும் தமிழ்நாடா
சிறியேஞ் சிற்றில் சிதையேலே! சிவநெறி தழைய வந்தவருட்
செல்வா சிற்றில் சிதையேலே!
குறிப்புரை :
1. பிறவா யாக்கைப் பெரியோன் (சிலம்பு) - சிவபெருமான்.
297