இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்
9. சிறுபறைப்பருவம்
81
(வேறு)
வள்ளலார் என்றுலகு போற்றிடத் திருவருள்
வயமுற்று நெஞ்சமுருகி
வான்மழை பொழிந்தென இராமலிங் கர்தரும் வண்டமிழ்த் தீம்பாக்களை
எள்ளி நகை யாவருட் பாவல்ல காணுமின் இன்னா மருட்பாவென
இழித்துப் பழித்துக் கழித்தோர் 2தெழிப்புக்கள் இரியப் புறங்கண்டுநின்
ஒள்ளிய வருட் புலமை 3தறுகண்மை யாலவை உயரருட் பாவேயென
உறுதியாய் நாட்டிநற் “செறுதிறல் அரியனுக்(கு) உவமைசொல நின்றபெரியோய்
தெள்ளிய தமிழ்ச்சிறப் புலகுணர விண்டவா சிறுபறை முழக்கியருளே!
செந்தமிழ் இலங்குங் கலங்கரை விளக்கமே சிறுபறை முழக்கியருளே!
305
குறிப்புரை :
1.
―
நகையா நகைத்து செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
2. தெழிப்பு
—
ஆரவாரம்.
3. தறுகண்மை
4. செறுதிறல்
வீரம்.
போர்வலிமை.