இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
308
மறைமலையம் -34 *
84
பல்லா யிரங்கால மாத்தமி ழினத்தவர்
பகைவர்தம் விரகாண்மையால்
பலநூறு பிளவுகொள் 1குலவேற்று மையெனும் பாழ்ங்குழியில் வீழ்ந்துபட்டுத்
2தொல்லைநாள் ஆண்டவன் எந்தமக் கருளினால் தோற்றியன அவையாமெனுந்
தூய்மையில் கதைபற்றி நாயினுங் கீழராய்த் துயருறக் கண்டிரங்கி
வெல்லுநுண் புலமையால் ஆராய்ந்து மாற்றவர் விழுப்பமில் கொள்கை வீழ்த்தி
வீறுகொண் டெந்தைசெய் 3நூல்கண்டு வையகம் வியப்பினால் வாய்திறப்பச்
4செல்லாப் பெரும்புகழ்ச் சீர்கொண்ட நாயகன் சிறுபறை முழக்கியருளே!
செந்தமிழ் இலங்குங் கலங்கரை விளக்கமே சிறுபறை முழக்கியருளே!
குறிப்புரை :
1. குலவேற்றுமை
2.
தொல்லை நாள்
―
சாதிப்பிரிவு. பழங்காலம்.
3. நூல் - சாதி வேற்றுமையும் போலிச் சைவரும், தமிழர் அல்லது வேளாளர்
நாகரிகம் - அடிகளாரின் நூல்கள்.
4. செல்லாப்புகழ் - குறையாப்புகழ். “செல்லாச் செல்வ” சிலம்பு.