இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
310
மறைமலையம் -34 *
86
(வேறு)
கத்து கருங்கடல் நீரை முகந்து
கடுகிவிண் மீதேறிக்
கருமுகிற் கூட்டம் பெருக முழங்கிக்
கனலுங் கோடையற
மெத்தவும் வாடிய பயிர்களும் மண்ணில் மேவிய பிறவுயிரும்
மேன்மையில் வறுமை நீங்கித் தழைய மேற்பொழி மாரியென
முத்தமிழ் அவையின் தலைமைப் பெரியோய் மொழிமழை பொழியுங்கால் மொழிநலம் ஓம்பார் எவரே யாயினும் 1மதியேம் எனமிசையில்
குத்து மணிக்கையி னிற்ிகுணில் கொண்டு கொட்டுக சிறுபறையே!
கொற்றத் தமிழின் வெற்றி சிறக்கக் கொட்டுக சிறுபறையே!
குறிப்புரை :
1. மதியேம்... - கரந்தை தமிழ்க் கழகத்தில் தனித்தமிழ்ப் போராட்ட நிகழ்ச்சி.
2. குணில் - பறையடிக்குங் குறுந்தடி.