இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்
87
ஆட்சியின் பற்பல துறைகளில் நடுநின்(று) 1 அறங்கூ றவையத்தில்
2அருளொளி வடிவன் திருவடி போற்றும்
அழகுறு கோவில்களில் மாட்சியின் மிக்க கல்வி பயிற்றும்
மனைகளில் மேன்மேலும்
மலருங் கலைகள் வளரப் பணிசெய்
மன்று களிற்செய்தி
ஏட்டினில் மற்றும் நாட்டினில் எங்கும் யாவினி லுந்தமிழே
இலங்கச் செய்வேம் என்று முழங்கி ஏற்பன செய்கின்ற
கோட்பா டுடையார் போற்றும் பெரும கொட்டுக சிறுபறையே!
கொற்றத் தமிழின் வெற்றி சிறக்கக் கொட்டுக சிறுபறையே!
குறிப்புரை :
1. அறங்கூறவையம் அறமன்றம்.
2. அருளொளி வடிவன்
இறைவன்.
311