இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்
89
1நறையுறு தமிழில் வடமொழி யதனில் நாளும் பெருகிவளர்
நாற்றிசை யாளும் ஆங்கில மொழியில்
நவிலும் பிறமொழியில்
துறைதுறை தோறும் அறிஞர்கள் யாத்துத் துலங்குபல் லாயிரநூல்
துருவித் துருவி யாய்ந்து படித்தே துய்த்தவை யுலகு பெற மறைமலை யடிகள் நூல்நிலை யமென
மன்னிச் சிறந்தொளிரும்
2மணிமொழி நூல்நிலை யந்தரு வள்ளால்
மற்றொரு பற்றின்றி
முறையுற இறையடி பரவிய பெரும
முழக்குக சிறுபறையே! மும்மைத் தமிழின் செம்மை சிறக்க முழக்குக சிறுபறையே!
313
குறிப்புரை :
1. நறை தேன்.
2. மணிமொழி நூல்நிலையம் மணிமொழி நூல் நிலையமென அடிகளார் நிறுவியதே இந்நாள் அவர்கள் விருப்ப ஆவணப்படி மறைமலையடிகள் நூல்நிலையமென விளங்குகின்றது.