இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
316
மறைமலையம் -34 *
92
'திறப்பா டிலாதவட வாரியத் தலைவரார்
செந்தமிழர் வீரமிகழா
செருக்கினால் எள்ளிநகை யாடினர்கள் என்றாலும் சீறிச் சினந்துபொங்கி
மறப்போர்க் களத்துவென் றாங்கவர்கள் புன்றலை மாமலைக் கல்சுமத்தி
மணித்தேர் இவர்ந்துவரு செங்குட்டு வப்பெரிய மன்னவன் றன்னை“மானப்
புறப்பாடு கொண்டுநற் றமிழைச் சிதைக்குநர் பொருந்துசிவ நெறிகெடுப்பார்
பூட்கைகள் யாவையும் வீழ்த்துநின் வெற்றியைப் புலவர்புனை வாகைபொலியச்
சிறப்போ டுலாவரும் செந்தமிழ்ப் பெருமறவ
சிறுதேர் உருட்டியருளே!
செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் உருட்டியருளே!
குறிப்புரை:
1. திறப்பாடு வல்லமை.
-
2. வடவாரியத் தலைவரார்
―
கனகவிசயர்.
3. இகழா இகழ்ந்து செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சம்.
4.
மான
உவமஉருபு.