இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்
317
93
பல்லா யிரஞ்சிறப் போங்குநன் னூல்களைப் பைந்தமிழ் நெறிசிறப்பப்
பாங்காக வச்சிட்டு யாங்கும் பரப்புநற் பணியில்தனி வென்றுநின்று
'கல்லாடை யன்கலை மன்றுநூல் நிலையமுங் கருதுசிவ ஞானமுனிவன்
காசுவென உலகுபுகழ் மாசிலா மணியிவர் கரையிலாத் தொண்டுபோற்றி
2நல்லாய்வு மன்றமும் நூல்நிலைய முங்கண்டு நாடுபிற பணியுஞ்செயும்
நானிலம் போற்றுநல் உயர்சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகமாம்
செல்லாப் 3புகழ்த்ததை நிறுவுவித் தருள்பெரும் சிறுதேர் உருட்டியருளே!
செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் உருட்டியருளே!
குறிப்புரை :
1. கல்லாடையன்...
2. நல்லாய்வு...
3. புகழ்த்ததை
மறைமலையடிகள் கலைமன்றம், மறைமலையடிகள் நூல் நிலையம். சிவஞானமுனிவர் ஆராய்ச்சி மன்றம், கா. சுப்பிரமணியனார் நூல் நிலையம்.
புகழுடையதை.