இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்
319
95
அறவாழி யந்தணன் குருவாகி வந்துமெய்
யருள்செய்து சிவமாக்கிநன்(கு)
ஆட்கொண்ட பெருநிலையில் நெஞ்சகம் நெக்குருகி அரியவின் னமுதத்தினை
உறழ்கின்ற தமிழினில் திருவாய் மலர்ந்துமொழி
யுதவிமெய் யுணர்விலெம்மை
ஊக்கித் திளைப்பிக்கு மாப்பெரிய வாதவூர்
ஒப்பிலாத் திருவாளனின்
பிறழ்வுற்ற வரலாறு காலமிவை பற்றிநனி பெரிதுமா ராய்ந்துமெய்ம்மை
பிறங்குமா றரியதொரு 1பெருநூல் இயற்றுநின் பேராண்மை கண்டுவையம்
திறவோ னெனப்பணிந் தேத்துமுயர் பெருமநற்
சிறுதேர் உருட்டியருளே!
செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் உருட்டியருளே!
பெருநூல் – “மாணிக்கவாசகர் வரலாறும் காலமும்” அடிகளாரின் நூல்.
குறிப்புரை :
A.