* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்
321
97
தடைசெய்க வென்றுபகை நடைகொண்ட கடையவர் தருக்கித் தலைநிமிர்த்தித்
தகைமாண்ட சீர்த்தியின் அறிவுரைக் கொத்துதரு 1தண்டமிழ்த் தாய்ச் சுட்டலும்
2கிடைகொண்ட தொழிலினர் விரகார்ந்த சூழ்வினிற் கிளைத்துவரு விளைவாயவர்
கிண்டலின் எழுந்தவார்ப் பாட்டங்கள் யாவுங் கிளர்ந்தெழு பெருங்காற்றினால் உடைபடச் சிதறியொழி 3கொண்மூக் குழாமென உருவிலா தேயொழிந்த
ஓவா முயற்சியின் தாவாத பேரறிவின் ஒண்டமிழின் மாசுபோக்கிக்
4கிடையுற்ற எம்மவரை யார்த்தெழச் செய்தவன்
சிறுதேர் உருட்டியருளே!
செந்தமிழர் வாழ்வுபெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் உருட்டியருளே!
குறிப்புரை :
1. தண்டமிழ்த்தாய் அடிகளாரின் ‘அறிவுரைக் கொத்து' என்னும் நூலிலுள்ள 'தமிழ்த்தாய்' என்னும் கட்டுரையைப் பாடத்தில் வையாது தடை செய்க வென்று ஒரு சாரார் ஆரவாரஞ் செய்தனர்.
2. கிடை - வேத மோதுங் கூட்டம்.
3.
கொண்மூ கருமுகில்.
4. கிடையுறல் மடிந்து கிடத்தல்.