இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
* பிள்ளைத்தமிழ் - இறைகுருவனார்
323
99
ஆக்கையை யுயிர்பெற்ற நோக்கைப் பகுத்தறிவின்
ஆரவாய்ந் தம்மையிம்மை
அன்றிமறு மையிருள் உலகின்ப உலகுகள்
அரியபெரு முத்திமற்றும்
வீக்கமுறு மாணவம் வினைமாயை பிறவுமென
விள்ளுவ நுனித்துணர்ந்து
வீழ்நாள் படாதிம்மை வாழ்க்கையை மேற்கொண்டு வேண்டல்வேண் டாமையிலா
'ஏக்கொண்ட செம்மையன் நன்னெறியில் ஒழுகற் (கு)
இயம்புதமிழிற் புதுமையாய்
2இறந்தபி னிருக்குநிலை யென்னுநன் னூல்வகுத்(து) இறவாத புகழில் வாழுந்
தேக்கமறு நின்னினிய தமிழொழுக் கேய்ப்பநற்
சிறுதேர் உருட்டியருளே!
செந்தமிழர் வாழ்வு பெற வந்தொளிர் செழும்பரிதி சிறுதேர் உருட்டியருளே!
குறிப்புரை :
1. ஏ - பெருமிதம்.
2. இறந்தபின் இருக்கும் நிலை - 'மரணத்தின் பின் மனிதர் நிலை' -
அடிகளாரின் நூல்.