* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் கனிவான சோமசுந் தரநாய கப்பெருமான்
களித்திடச் சொன்ன தாலே
கற்றநற் சிவஞான போதமும் பிறநூலும் கடல்மடை திறந்த தேபோல்
தனியான செந்தமிழ்ப் பிரவாக மாகவே, “தணிகைமணி” செங்கலவ ராயரும் தன்னிகரே இல்லாத “ரசிகமணி” சிதம்பரர் தமிழ்வையா புரியினோடு
மனிதருள் மாணிக்கம் “நாவலர்” பாரதி
மாணவர் ஆகி நிற்க
மாத்தமிழ் கற்பித்து மூத்தநற் புலவோர்க்கு மதிதரும் பரிதி ஆனோய்!
முனிசொன்ன சிவஞான போதத்தைக் கற்றநல் வாயாலே முத்தம் தருகவே!
மூதறிஞர் பேரவையில் சீதனமாம் மறைமலையே
5) முழுநிலா முத்தம் தருகவே!
திருவருள் துணையினால் பிணிநீங்கி வந்ததால் திருவொற்றி முருகன் மீது
செந்தமிழ்ப் பாடலால் மும்மணிக் கோவையைச் செகமெலாம் போற்று மாறும்,
குருவெனும் நாயகர் பிரிவினால் காஞ்சியைக்
குவலயம் போற்று மாறும்,
கொழிதமிழ் வளர்த்திட ஞானசா கரமெனும் குணமிகு பத்தி ரிக்கை
43
அடிகளின் குருவாகிய சோமசுந்தர நாயகரின் ஆணைப்படி அடிகள் “சிவஞான போதம்” பற்றியும் பிற நூல்கள் பற்றியும் ஊருக்கூர் சொற்பொழிவுகள் செய்தார்.
தணிகைமணி
மாணவர்கள் ஆவர்.
செங்கல்வராயர்,
ரசிகமணி
டி.கே.சிதம்பரநாதர், வையாபுரிப்பிள்ளை ஆகியோர் அடிகளின்