* பிள்ளைத்தமிழ் - அரு. சோமசுந்தரன் கற்ற நூல்கோடி கவிசொல் தாள்கோடி
கனகமா மலையிலுள்ள
கற்றைச் சடையவனாம் கங்கைக் கிறையவனாம் கண்மூன் றுடைய பெம்மான்
நெற்றிக் கண்ணில்எழு வெற்றித் திருமுருகன்
நேயமிகும் அருண கிரியோ?
நெல்லைப் பொருநையிலே கல்லைக் குடைவித்த
நேர்த்திமிகு குறுக்குத் துறையோ?
பற்றிப் படர்தற்குப் பொற்றேர் கொடிக்கீந்த
பாரிப் பறம்பு மலையோ?
பாலைக் கலந்து தமிழ்த் தேனைக் குழைத்துதரும்
பண்பு வேத மலையோ?
பற்று தமிழுக்கு; முற்றில் எனக்கண்ட
பச்சைக் கிளியே! வருகவே!
பல்லா வரத்திலெழு பிள்ளாய் தமிழ்ஒழுகு
2) பச்சைக் குழந்தாய் வருகவே!
சட்டை துறந்தாலும் சாட்டை துறவாமல்
சபையில் தமிழ்முழக்க மிட்டு
சங்கம் ஒருமார்க்கம் சான்ற சன்மார்க்கம்
சாலும் நெறியென்று சொல்லி
49
அடிகள் கற்றநூலும், அவருக்குக் கவிசொன்ன தாளும் கோடியாகும்.
யார்?
தமிழும் பக்தியும் இயைந்த அருணகிரியோ?
குறுக்குத் துறையோ? பறம்பு மலையோ?
இந்த (வேதாசலம்) வேத மலையாகிய மறைமலை அடிகள்
தமிழில் இவர் வைத்த பற்றுக்கு முடிவில்லை.