58
மறைமலையம் - 34
கோகி லங்கள்எலாம் கூவி உனை அழைத்துக்
குரலில் கடிதங்கள் கூறும்.
கொள்ளை ஆசைகளைக் கோகி லாம்பாள்கடி தங்கள் எடுத்திங்கே கூறும்.
ஊகித் துரைப்பதிலும் மூழ்கித் திளைப்பதிலும் உன்னைப் புலவரெலாம் கொள்வார். ஊரில் உள்ளவர்கள் பாரில் இவன்புகழை உணர்ந்து பாடிமகிழ் வுண்டார்.
சாகித் தியங்கள்எலாம் பாடிப் பரவிடவே சான்ற நிலவொளிகள் செய்வாய்.
சாகித் தியக்குழுவும் சான்ற தமிழ்க்குழுவும் சாற்று கவிபாடச் செய்தான்.
ஆகி வளர்ந்ததனால் நீயும் இறங்கிஇவண் அம்புலீ ஆட வாவே!
அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன்
3) அம்புலீ ஆட வாவே!
மறைகள் உனைச்சரணம்; மலையை நீசரணம்
மதியே! நீ திகழும் காட்சி!
மறையும் மலையும்எலாம் சரணம் இவனைஉற மாண்பால் இவன்பெயரே சாட்சி!
சந்திரன்
மறைமலை அடிகள்
(குயில்) கோகிலங்கள் குரல் மூலம் கோகிலாம்பாள் கடிதங்கள் சந்திரனுக்குக் கடிதம் அனுப்பல். எனும் நூல் எழுதல்.
புலவர்கள் மூழ்கித் திளைத்தல்
அப்படியே.
சாகித்தியங்கள் (பாடல்கள்)
பாடுதல்
சாகித்தியக் குழுவும் புலவர் குழுவும் பாராட்டல்.