62
மறைமலையம் - 34
வீட்டில் உனக்குமொரு வெள்ளி உண்டுவான்
வீதி தன்னில்நீ காட்டுவாய்!
வீடு பேறிவனும் கிழமை வெள்ளியிலே வெற்றி யோடுபுகழ் ஈட்டுவான்.
கூட்டில் உனக்குமொரு முறியும் உண்டெனவே
கூறு போடுவதும் நாகமே!
கூறில் இவனுமொரு முறியை எழுதியதால் கூறு போடுவதும் பாகமே!
ஈட்டி எய்தரிய புகழைக் கொண்டமதி
ஏறி யதும்சிவன் சித்தமே!
இவனும் இன்றுவரை எழுதும் நூல்களெலாம்
ஏறியதும் சைவசித் தாந்தமே!
ஆட்டிப் படைப்பவனாம் நாட்டுப் புலவனுடன் அம்புலீ ஆட வாவே!
அத்தன் உயர்தமிழில் சித்தன் அடிகளுடன்
7) அம்புலீ ஆட வாவே!
சந்திரன்
வான வீதியில் வெள்ளி உண்டு.
உடலை ராகு கேது விழுங்கு வதால் உடல் கூறுபட்டு முறி படுகிறது
சிவன் தலையில் ஏறி இருப்பது சிவன் சித்தப்படி
அடிகள்
வீடு பேறு பெற்றது வெள்ளிக்கிழமை
இறுதி முறி (Will) எழுதித் தன் எழுத்து வருவாய் எவ்வாறு கூறு போடப்பட வேண்டும் என்று பாகம் பிரித்தார்.
வரது நூல்கள்
அச்சேறுவது சைவ சித்தாந்த
நூற்பதிப்புக் கழகத்தால்.