68
-
மறைமலையம் - 34 *
பண்ணில் தும்புரு நீதானோ? பலத்தில் ஆஞ்ச நேயன்தான்! படையில் ஆளும் பார்த்தன்நீ! பார தத்தில் வீமன்நீ!
தெண்ணீர் அமுதைக் குழைத்துதரும் சிறுவா! சிற்றில் சிதையேலே!
தேவா! தமிழர் செய்ததவச் 3) செல்வா! சிற்றில் சிதையேலே!
நீலா பூமா இலக்குமியாய்
நீரின் வண்ணன் கொண்டபடி நேயம் மூன்று பேர்களிடம் நெஞ்சம் கொண்ட திருமாலோ?
பாலா றோடும் தமிழ்நாடும்
பஞ்ச நதிபாய் பஞ்சாப்பும் பண்பாய்ச் சேர்ந்து வாழவெனப் பைந்தமிழ் வடமொழி பயின்றாயோ?
காலோ டிருந்து பயனில்லை
கடலோ டிகளும் வேண்டுமெனக் கடலைக் கடந்து சென்றாயோ? கதையும் எழுதி நின்றாயோ
தேளோ நீக்கித் தமிழ்குழைக்கும் சிறுவா! சிற்றில் சிதையேலே! தேவா! தமிழர் செய்ததவச்
4) செல்வா! சிற்றில் சிதையேலே!
உயிர் இழை கருமுகில் = கண்ணன்.
ஆங்காரம்
=
= உயிர்க் கருத்து.
அகங்காரம் (மமதை)
திருமாலுக்கு நீலாதேவி, பூமாதேவி, இலக்குமி என்ற மூன்று
மனைவியர்.
அடிகளுக்கும் மூன்று மனைவியர்.
தேள் போன்ற கலப்புச் சொற்களை நீக்கித் தமிழைக் குழைத்துத் தருபவர் அடிகள்.