உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/103

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

78

  • மறைமலையம் 8 – 8

சிலரை இன்பப்பகுதியின் கண்ணும் ஒருசிலரைத் துன்பப் பகுதியின் கண்ணும் நிறுத்துதல் இறைவனுக்கு நடுவுநிலை யாகாதெனக் கடாவுவார்க்கு இறுக்கலாகாமை யானும் அது பொருந்தாதென் றொழிக. இது கிடக்க.

இனி சிருட்டி என்பது தான் யாதோவெனின் அதனை ஒரு சிறிது விளக்குவான். சிருட்டி எனினும் ஒழுங்குபடுத்தல் எனினும் ஒக்கும். யாதினையோ ஒழுங்குபடுத்தலெனின் அவயவமின்றிப் பிண்ட மாகக்கிடந்த ஒரு பொருளை அவயவமுடைத்தாக நெறிப்படுத்து அமைத்தலாம். அவயவம் எனினும் உறுப்பு எனினும் ஒக்கும். இறைவன்றன் அரும் பேராற்றலால் நிகழ்த்துஞ்சிருட்டிக்கு உபமானமாக எடுத்துக் காட்டப்படும் பொருள் ஒன்று இவ்வுலகிலில்லையாயினும், ஈண்டெடுத்துக்கொண்ட தருக்கம் இனிது விளங்குதற் பொருட்டு ஒருதாரணம் வகுத்துக் காட்டுவாம். தச்சுத்தொழில் செய்வான் ஒருவன் பிண்டமாகக்கிடந்த முழுமரம் ஒன்றை வாளாற் பலதுண்டுகளாக ஈர்ந்து, அவற்றையெல்லாம் வழுவழுப்பாக இழைத்துத் திரட்டுவனவற்றைத் திரட்டிக் கடைந்தும், குறைக்குமிடங்களில் அவற்றைக் குறைத்தும் மிகுத்தும் பலவேறுபடுத்திப் பின் அத்தண்டுகளையெல்லாம் ஒன்றாக இயைத்து ஆணியறைந்து ஒரு நாற்காலிசெய்யக் காண்கின்றோம். ங்ஙனம் பிண்டமாகக்கிடந்த முழுமரம் ஒன்றைப் பலவாகத் திரித்து அவயவமுடைய நாற்காலியாக ஒழுங்கு படுத்து முயற்சியே சிருட்டியாவதாம். இது போல், இறைவனும் அவயவமின்றி யருவமாய்க்கிடந்த அதிசூக்குமப் பொருளாகிய மாயையை மலையுங் காடும் நாடுங் கட லு அவயவமுடைய தூலவுருவப் பிரபஞ்சமாக ஒழுங்குபட நிருமித்து ஆன்மாக்களுக்கு உபகாரமாக வைத்தருளினான். ங்ஙனஞ் செய்யப்படுவதாகிய சிருட்டியும் அதிசூக்கும உள்பொருண் மாயையிற் செயப்படுவதல்லது சூனியத்தின்கட் செயப்படுவ தன்றாம். ஆகவே, சிருட்டி என்பது எக்காலத்தும் இருப்பதாகிய உள்பொருள் ஒன்றனையே வேறு வேறாக ஒழுங்குபடுத்து நிருமிக்கும் முயற்சியாமென்பது ஈண்டுக் கூறியவாற்றால் இனிது விளங்கும்.

து

மாகிய

அற்றேல், அழிப்பு அல்லது சங்காரம் என்னு முயற்சியாற் பிரபஞ்சங்களெல்லாம் சூனியமாய் அழிந்துபடக் காண்கின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/103&oldid=1574519" இலிருந்து மீள்விக்கப்பட்டது