உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

மறைமலையம் லயம் – 8

மிக்க

ரூபமாகத்தோன்றுங் குடமும் ஆபரணமுந் தேய்ந்து தேய்ந்து தத்தங் காரணசூக்கும அணுரூபமாக ஒடுங்கிய வழியும் அவற்றின் இருப்பு ஆண்டும் உளதாவதேயன்றிச் சூனியமாதல் ஒருவாற்றானும் இல்லை யாதலான், இதுபோற் பிரபஞ்ச இருப்பும் யாண்டும் உளதாவதேயன்றி இலதாதல் இல்லை யென்றொழிக. எம்முடைய ஊனவிழிகளுக்குத் தோன்றாமை பற்றிப் பிரபஞ்ச இருப்பை மறுத்துரைத்தல் பெரிதுங் குற்றமாம். ஊசிநுனியிற்றங்கிய நீர்த்துகளை ஆங்கிலேய தத்துவ சாத்திரிகள் உபகரித்திருக்கும் பெருக்கக்கண்ணாடி யால் நோக்குவார்க்கு அதன்கண் அடங்கிய அளவிறந்த புழுக்களும் அப்புழுக்களின் வேறுவேறான அற்புதசிருட்டி வடிவங்களும் அவற்றின்தொழில் வேறுபாடுகளும் பிறவும் வியப்புடையனவாய் விளங்கும். அக்கருவியின் உபகாரமின்றி நோக்குவார்க்கு அவை ஒரு சிறிதும் விளங்கா. இங்ஙனஞ் சிற்றறிவுஞ் சிறுதொழிலுமே முகிழ்ப்பதற்கு ஏதுவான கருவிகளுடன் அமைந்த இம்மானுட யாக்கையின் கண் இருக்கப்பெறுவேமாகிய யாம் இறைவன் செய்யும் அற்புத கருணைக்கிருத்திய வியல்பை எங்ஙனங் காண்பேம்? எவ்வாறு உரைப்பேம்? சிருட்டிக்காலத்தின் முன்னும் மாசங்கார காலத்தின் பின்னும் அதிசூக்குமகாரணமாயா சொரூபமாய் ஒடுங்கி விளங்கும் இப்பிரபஞ்சங்களையும் இப்பிரபஞ்சங்களில் வைகிய ஆன்மாக்களையும் யாண்டும் வியாபித்து எல்லாப் பொருள்களையும் இருந்தவாறே கண்டறியும் ஞானக்கண் உடையனாகிய இறைவன் ஒருவனே காண்பான்; அக்காலத்தில் அதிசூக்கும காரண மாயாசொரூப மான இப்பிரபஞ்சங் களெல்லாம் வெள்ளிடையிற்றோன்றும் மலைபோல அவன் ஞானக்கண்ணெதிரே தூல ரூபமாகவே விளங்குவனவாம். இவ்வாறாகலிற் சங்காரகாலத்திலே இப்பிரபஞ்சங் களெல்லாஞ் சூனியமாய் ஒழியும் என்பார் வார்த்தை ஒருசிறிதும் அடாத போலியாய் முடியுமென்றுணர்க. உள்பொருளை இல்லாத சூனியப்பொருளாகத் திரித்தல் ஒருவரானும் ஒருகாலத்தும் முடிவதன்று என்பது பற்றியே பௌதிகசாத்திரம் வல்லராகிய ஆங்கில நன்மக்களும் பொருளழியாமை என்று தலைப் பெயரிட்டு இவ்விஷயத்தைத் தன் நூலுட் பரக்க ஆராய்ச்சி செய்வாராயினர்.

L

ம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/105&oldid=1574521" இலிருந்து மீள்விக்கப்பட்டது