180
மறைமலையம் 8
– 8
66
சிவமயம்.
திருச்சிற்றம்பலம்.
ஸ்ரீஜ்ஞானசம்பந்த குருப்யோநம:
வாழ்த்து
“வாழ்க வந்தணர் வானவ ரானினம்
வீழ் தண்புனல் வேந்தனு மோங்குக
ஆழ்க தீயதெ லாமர னாமமே
சூழ்க வையக முந்துயர் தீர்கவே”
தமிழ் மிகப்பழைய மொழியாமென்பது
பரந்துகிடக்கும் இந்நிலவுலகத்தின்கண்ணே பண்டைக் காலந் தொட்டு இலக்கண விலக்கிய வரம்புடைமையாற் சீர்திருந்தி வழக்கமுற்று வாராநின்ற மொழிகள் தமிழ், வடமொழி, இலத்தீன், கிரேக்கு, இப்புரு முதலியனவாம். உலகத்தின்கட் பேசப்படுவனவாகுந் தொள்ளாயிர மொழி களுள் இவ்வைந்தும் வேறுசிலவும் அங்ஙனந் தொன் மொழி களென் றுயர்த்துக் கூறப்படுதற்கு இடம் பெறுவதல்லது ஏ னைய அவ்வாறு சொல்லப்படா வென்றுணர்க. இவற்றுள், தமிழ் மொழியை ஒழித்து ஒழிந்த வடசொல், இலத்தீன் முதலிய வற்றையெல்லாம் ஐரோப்பிய பண்டிதர்கள் நன்காராய்ச்சி செய்து அவற்றைப் பண்டைக்காலத்து மொழிகளெனப் பெரிதும் பாராட்டிப்போற்றுகின்றார்கள். இனித் தமிழையோ வெனின் அங்ஙன முண்மை யாராய்ச்சி செய்யமாட்டாது நெகிழவிட்டு, அதனைப்பற்றி யுரை யுரைக்கும் வழியெல்லாந் தாந்தா மனம்போனவாறு சொல்லி யுண்மைப்பொருள் காணாது ஒழிகின்றார். இதற்கென்னையோ காரணமெனின், வடமொழி முதலான சொற்குரிமை பூண்டு அவற்றை வழங்குவாரான நன்மக்கள் அபிமான மிகவுடையராய் அவற்றை விருத்தி செய்தலோடு, பிறருந் தமக்கநுகூலமாய்நின் றதனை யவ்வாறு விருத்தி செய்யுமாறு தூண்டுதலுஞ் செய்து போதருகின்றார். இனித் தென்றமிழ் நாட்டில் தமிழ் வழங்கு மக்களோ அங்ஙனம் நல்லபிமானங் கொளவறியாமல் உண்டிப் பொருட்டுப் பொருள் தொகுத்தலின் கண்ணே நிலைபேறு மிகவுடைய ராய் மொழியாராய்ச்சியிற் சோம்பலுற்று உறங்கிக்