உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 8.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

182

மறைமலையம் லயம் – 8

களோடு கூடிய க், ச், த், ந், ப், ம், வ், ய், ங், ஞ் என்னும் பத்து மெய் யெழுத்துக்களையும் முதற்கொண்டு தொடங்குகின்றன; ட், ண், ர், ல், ழ், ள், ற், ன் என்னும் எட்டு மெய்யெழுத்துக் களைக்கொண்டு அவ்வாறு தொடங்குகின்றில. ஆரியம், இலத்தீன் முதலிய மொழிகளோ இவ்வெழுத்துக்களையும் முதலிட்டுத் தொடங்குஞ் சொற்களுடையனவாய்க் காணப்படு கின்றன. ஆரிய மொழியிற் காணப்படும் டம்பம், ரத்நம், லவணம் முதலிய சொற்களை அம்மொழியிற் கிடந்தவாறே கூறாது, இடம்பம், அரதனம், இலவணம் முதலியனவாகத் திரித்துத் தமிழ்மக்கள் வழங்குகின்றனர்.. அச்சொற்களை அம்மொழியிற் கிடந்தபடியே கூறாது அங்ஙனந் திரித்துக்கூறல் வேண்டுவதென்னை யெனவும், தமிழ்ச்சொற்கள் ‘ட், ண்’ முதலான அவ்வெட்டு மெய் யெழுத்துக்களை முதல் நிறுத்துத் தொடங்காமை என்னை யெனவும் நுணுகி யாராயும்வழித் தமிழ்மொழி மற்றெவ் வெல்லாப் பாடைகளினும் பழைதாமென்னு முரைப்பொருள் தெற்றென விளங்காநிற்கும். அவ்வாறாதல் காட்டுதும்.

இனி, ஒருபாடையி னுற்பத்திக்கிரமத்தை நோக்கவல்ல நுண்ணறிவாளர்க்கு, விலங்கினங்களைப்போல் அநாகரிக நிலையிலிருந்து சொற்சொல்லுமாறறியாது குறிப்பானு ணர்த்திப் பின்னும் விளங்காமையான் இயற்கையினிகழும் ஒலிவகைப் பற்றிக் கூற்று நிகழ்த்திச் சிறிதுசிறிதாய்ச் சொற்சொல்லு மாறறிந்து அறிவுகூடப் பெற்றுவரும் மக்கட்டன்மையும், தாய்தந்தையர் கூட்டுறவானே சொற் சொல்லுமாறறிந்து அறிவுகூடிவருஞ் சிறுமகாரியல்புந் தம்முளொத்த பெற்றிமை யுடையவாமா றினிது விளங்கும். எனவே, ஒருபாடையினுற்பத்தி முறை நன்காராய்ந் தளந் தறிதற்கு இன்றியமையாப் பருஞ்சாதனமாய் முன்னிற்பது சிறுமகார் வளர்ச்சி முறையை யுற்றுநோக்கி யுணர்தலேயாம். உயிரெழுத்துக்களொழிய மெய்யெழுத்துக்களுட் சிறும காரான் முதன்முதன் மொழியப் படும் ஒலி யெழுத்து இதழிரண்டனையுஞ் சிறிது மெல்லென்று கூட்டுதலானே பிறக்கும் ம என்பதேயாம். அங்ஙனம் இதழ் கூட்டித் தந்தாயைக் கூவும்வழி அடுத்தடுத்த மா மா என்று சொல்லுதலானே அம்மா எனுஞ் சொற்றோன்றுவதாயிற்று. இனி அவர் அம்மா எனு மச்சொற்கற்றதுணையானே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_8.pdf/207&oldid=1574626" இலிருந்து மீள்விக்கப்பட்டது