ஞானசாகரம்
223
வியல்பிறழமொழிந்து ஏதம்படுவாராயினாரென்பது தெற்றென விளங்காநிற்கும். இனி, எப்பொரு ளெத்தன்மைத் தாயினு மப்பொருண் மெய்ம்மைதேறி யுலகைத் தேற்றவல்ல பெரியார்க்கு இவைபோலு அபிமானவுரைகள் ஒருசிறிதும் பொருந்தாவாம். இன்னும் ஷை போப்புத்துரையவர்கள் நாலடியார் திருக்குறள் முதலியவற்றின் மொழிபெயர்ப்பின் கணெல்லாம் இவ்வாறே மெய்ம்மைதிறம் மெய்ம்மைதிறம் பியுரைத்த மாறுகோளுரைகளையெல்லாஞ் சமய நேர்ந்துழி எடுத்து மறுத்துண்மைப்பொருள் நிலையிடுவாம். இனி, ஞான சம்பந்தப்பிள்ளையார்காலம் ஏழல்லதெட்டாம் நூற்றாண் டொன்றன்கட் படுவதன்றி படுவதன்றி இரண்டினும் ஒப்பச்சேறல் கூடாமையான், அக்காலவரையறைதான் யாதென்றறிய வேண்டுவார்க்கு அது காட்டுவாம்.
ய
அ
இனி, உண்மைச் சரிதவியல்பிறழாதுரைக்கும் பெரிய புராணஞ் சிறுத்தொண்டநாயனார் வரலாற்றில், பரஞ் சோதியாரென்னும் பெயருடைய அச்சிறுத்தொண்டர் திருச்செங்காட்டங்குடியிற் பிறந்தவரெனவும், அவர் போர்த் தாழில்பலவுங்கற்று மிகவல்லராய்ச் சிவபெருமான் றிருவடிக்கண் மெய்ப்பத்தி பூண்டொழுகித் தம் மரசனிடத்துத் தண்டத்தலைமை மேற்கொண்டவற்கு அணுக்கராயிருந்தா ரெனவும், அங்ஙனமமருங்காலத்து வடநாட்டில் வாதாவி என்னுநகர்மேற் படையெடுத்துச் சென்று அதன்மன்னனை வெற்றிகண்டு வாகைசூடித் திரும்பத் தம்நாடடைந்து தம்மரசற்குப் பெரும்புக ழெய்து வித்தாரெனவுங் கிளந்துரையா நின்ற
66
66
‘ஈசனடி யார்க்கென்று மியல்பான பணிசெய்தே
யாசில்புகழ் மன்னவன்பா லணுக்கரா யவற்காகப் பூசன்முனைக் களிறுகைத்துப் போய்வென்று பொருமரசர் தேசங்கள் பலகொண்டு தேர்வேந்தன் பாற்சிறந்தார்"
“ மன்னவற்குத் தண்டுபோய் வடபுலத்து வாதாவித்
தொன்னகரந் துகளாகத் துளைநெடுங்கை வரையுகைத்துப் பன்மணிபு நிதிக்குவையும் பகட்டினமும் பரித்தொகையு மின்னனவெண் ணிலகவர்ந்திங் கியலரசன் முன்கொணர்ந்தார்"